» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!

சனி 22, ஆகஸ்ட் 2026 10:15:22 AM (IST)

கேரளாவின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கொச்சி மற்றும் திருவனந்தபுரம் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கேரள மாநிலத்தின் மிக முக்கியமான விழாவான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் (2026) முக்கிய நல்நாளான திருவோணம் வருகிற ஆகஸ்ட் 26 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. 

பண்டிகையை முன்னிட்டுச் சென்னையில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்களில் பயணச்சீட்டு கிடைக்காத நிலையையும், விடுமுறை நேரப் பயணத்தையும் சாதகமாகப் பயன்படுத்திப் பல தனியார் மற்றும் பொதுத்துறை விமான நிறுவனங்கள் கட்டணத்தைக் கணிசமாக உயர்த்தியுள்ளன. 

சென்னை - கொச்சி: வழக்கமான கட்டணம் ரூ. 5,336 ஆக இருந்த நிலையில், தற்சமயம் ரூ. 14,843 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை - திருவனந்தபுரம்: வழக்கமான கட்டணம் ரூ. 5,853 ஆக இருந்த நிலையில், தற்சமயம் ரூ. 14,700 ஆக உயர்ந்துள்ளது.

திடீரெனக் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால், பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் சென்னை வாழ் கேரள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory