» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!

புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

NellaiPhotograph.jpg

திருநெல்வேலியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு நலதிட்ட பணிகள் நடைபெற்றன.

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் முதியோருக்கு உணவு வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் சிறப்புப் பயிற்சி வகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலக புகைப்பட தினமான இன்று காலை, நெல்லை மாவட்ட புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த முதியோர்களுக்குக் காலை உணவு வழங்கிச் சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் தானாக முன்வந்து ரத்ததானம் வழங்கினர்.  தொடர்ந்து புகைப்படக் கலைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory