» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இடுக்கு பிள்ளையார் கோவிலில் மேலும் ஒருவர் சிக்கியதால் பரபரப்பு: பெண் பக்தர் பத்திரமாக மீட்பு!
திங்கள் 27, ஜூலை 2026 8:37:02 AM (IST)
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோவிலில் நுழைந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இடுக்கில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் 7-வது லிங்கமான குபேர லிங்கம் கோவில் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குகை போன்ற சிறிய வாசல் உள்ளது. பக்தர்கள் இதன் பின்புறம் வழியாக நுழைந்து முன்பக்கம் வழியாக வெளியே வந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவில் குடும்பத்தினருடன் கிரிவலம் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றுள்ளார். குகை போன்ற சிறிய வாசலில் நுழைந்த அவர், வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவரும் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கிரிவலம் சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தபோது, உடல் பருமனான ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இடுக்கு பிள்ளையார் கோவில் குகை வாசல் வழியாகச் சென்று வெளியே வர முயன்றுள்ளார். ஆனால், இடுக்கின் அளவு சிறியதாக இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் பாதியிலேயே சிக்கிக்கொண்டு கூச்சலிட்டார்.
அங்கிருந்த சக பக்தர்கள் அவரது கரங்களைப் பிடித்துச் சிரமப்பட்டு இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்தடுத்து பக்தர்கள் சிக்கிப் பாதிப்புக்குள்ளாகி வருவதால், இடுக்கு பிள்ளையார் கோவிலில் உரியப் பாதுகாப்பு வழிமுறைகளைச் செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது; மீறினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:52:31 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:12:06 PM (IST)

அதிக மதிப்புள்ள கனிமங்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை: புதிய அரசாணை வெளியீடு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:04:00 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)


