» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-ஆவது சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், அதிமுகவிலிருந்து விலகித் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த 4 பேருக்குச் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பின்னர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல், தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதில் மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் (தனி) சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்தனர்.
இதன் காரணமாகத் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. விதிமுறைப்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் நோட்டீஸ்
இந்தச் சூழலில், ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்தும், அவர்கள் 4 பேர் மீதும் ஏன் தகுதி நீக்கம் உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் 7 நாட்களுக்குள் நேரில் அல்லது எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

சேலத்தில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் அதிரடி கைது!
சனி 13, ஜூன் 2026 12:22:44 PM (IST)

மாணவி கொலை வழக்கு: மரண தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீடு செய்ய மீண்டும் அவகாசம்!
சனி 13, ஜூன் 2026 10:40:05 AM (IST)

புகையிலைக்கு நாடு முழுவதும் முழுமையான தடை : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 13, ஜூன் 2026 10:32:37 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி சிஎஸ்ஆர் நிதி: 11 திட்டங்களுக்கு ஒப்புதல்!
சனி 13, ஜூன் 2026 8:52:16 AM (IST)



Yoseph EJun 12, 2026 - 08:02:58 PM | Posted IP 104.2*****