» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது!

ஞாயிறு 31, மே 2026 9:22:28 AM (IST)

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட வழக்கில், கோவில்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரயில்வே பீடர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி எடுத்து, அதனை ஆபாசமான முறையில் கணினியில் சித்தரித்து தொடர்ந்து வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பெண்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஆபாசப் புகைப்படங்கள் வெளியாவது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், நாலாட்டின்புதூர் போலீஸார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, தலைமறைவாக இருக்க முயன்ற சூரிய சாரத்தை நேற்று சனிக்கிழமை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory