» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தி.மு.க. வேட்பாளர் வீட்டில் 122 பவுன் நகைகள் கொள்ளை: தம்பதி மற்றும் இளம்பெண் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:25:59 AM (IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கடற்கரைராஜ் வீட்டில் 122 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டவர் கடற்கரைராஜ். இவர் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
அங்கிருந்த 122 பவுன் நகைகள், 800 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தின. இவ்வழக்கில் ஏற்கனவே ஆரோக்கிய ஜான்போஸ்கோ (41) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரிடமிருந்து 12 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சாத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (31), அவரது மனைவி பவானி (30) மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த அபிநயா (30) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளரின் குடும்பத்தினர் பிரசாரத்தில் இருந்ததை நோட்டமிட்டு இவர்கள் இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த துணிகரக் கொள்ளையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் போலீசார், அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுக: சீமான் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:25:41 PM (IST)

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் கோவை சூர்யா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:43:20 PM (IST)

நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)


