» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை : டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தல்!

வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:40:55 PM (IST)



பல்வேறு மாவட்டங்களில் செய்தியாளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டைகள் வழங்குவதில் பாரபட்சமாக செயல்பட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பல மாவட்டத்தில் தங்களுக்கு வேண்டிய செய்தியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்குவது கண்டிக்கத்தக்கது. மேலும் இதில் ஏதோ முறைகேடுகள் நடைபெறுவதாகவும் சந்தேகம் எழுகிறது.

மே 4 ஆம் தேதி கண்காணிப்பு பணிகள் உள்ள நிலையில் உடனடியாக தேர்தல் அதிகாரிகள் இதில் தலையிட்டு, பாரபட்சம் காட்டுவதை தடுத்து நிறுத்தி, தகுதி உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறோம். இதே நிலை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory