» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலீசார் - கம்யூனிஸ்ட்டுகள் இடையே வாக்குவாதம்: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
திங்கள் 19, ஜனவரி 2026 12:30:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் அலுவலக வாயில் அருகே நின்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வாகனம், போக்குவரத்தில் சிக்கியது.
இதனால், ஆத்திரமடைந்த போலீசார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை நிற்க விடாமலும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். மனு அளித்த பிறகு மாற்று இடத்தில் பத்திரிகையாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேட்டியளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக அமல்: தமிழக அரசு
சனி 24, ஜனவரி 2026 5:49:07 PM (IST)

புலிகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு : சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 24, ஜனவரி 2026 5:23:08 PM (IST)

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
சனி 24, ஜனவரி 2026 4:41:51 PM (IST)

இந்தியை திணித்து தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ்: சீமான் குற்றச்சாட்டு
சனி 24, ஜனவரி 2026 3:59:25 PM (IST)

மழைநீர் வடிகால்வாயில் கொசுவலை போர்த்தியது ஏன்? - மேயர் பிரியா விளக்கம்
சனி 24, ஜனவரி 2026 3:32:33 PM (IST)

சத்துணவு பணியாளர்களுக்கான புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சனி 24, ஜனவரி 2026 11:53:11 AM (IST)

