» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்: 200 பேர் கைது

திங்கள் 29, செப்டம்பர் 2025 3:06:46 PM (IST)



விளாத்திகுளம் அருகே பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர் கயத்தார், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதம் செய்த அதிக கனமழையினால் மிளகாய், உள்ளி, கொத்தமல்லி, சூரியகாந்தி, கம்பு, சோளம்,உளுந்து, மாசி போன்ற அனைத்து சேதம் அடைந்தனர்.

சேதம் அடைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த இழப்பீடு வழங்க கோரியும், 2024 - 2025 நிதி ஆண்டிற்கான கனமழையினால் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு தொகையை உடனடியாக விடுவிக்க கோரியும் விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று புதூர் பேருந்து நிலையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விவசாயிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மறியல் போராட்டம் காரணமாக புதூர் பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக கரூரில் தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தின் போது உயிரிழந்த 41 பேருக்கு புதூர் பேருந்து நிலையம் முன்பு அனைத்து விவசாயிகள் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory