» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப்-4 தேர்வில் 727 கூடுதல் பணியிடங்கள் சேர்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சனி 27, செப்டம்பர் 2025 10:50:40 AM (IST)

குரூப்-4 தேர்வில் 727 கூடுதல் பணியிடங்கள்  சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் "கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 4 பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. 

கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அறிவிக்கப்பட்ட மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4662 ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory