» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)
தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. வெங்கட்ராமன், 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர்.
இளங்கலை பொருளாதாரம், முதுகலை பொது நிர்வாகம் முடித்த இவர், 1996 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பணியைத் தொடங்கினார். 1996 -ல் உதவி காவல் கண்காளிப்பாளராக (ஏஎஸ்பி) திருச்செந்தூரில் பணியாற்றினார். 1997-ல் கோவில்பட்டி, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
1998 ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளரனதும் மத்திய அரசின் உளவுப் பிரிவு பணிக்குச் சென்று, தமிழகம் திரும்பினார். 2001 ஆம் ஆண்டு சென்னை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.
2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தார். 2012-ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம், தலைமையகம், நிர்வாகப் பணிகளில் பணியாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST)

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)

சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 6:59:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

செப்.4ம் தேதி தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:48:33 PM (IST)

ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீண்டும் வழக்கில் சேர்ப்பு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:09:45 PM (IST)
