» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் நேற்று கரைதிரும்பின. மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, மீன்கள் சரிவர கிடைக்காததால் வரத்து குறைந்திருந்தது. இதனால், வழக்கத்தைவிட விலை உயர்ந்து காணப்பட்டது.
விளைமீன், ஊழி, பாறை ஆகியவை கிலோ ரூ. 300 -ரூ. 600 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 800 முதல் ரூ. 1000 வரை, நண்டு கிலோ ரூ. 550 வரை, தோல்பாறை ரூ. 200 வரை என விற்பனையாகின. ஏற்றுமதி ரக மீன்களான கலவா கிலோ ரூ. 450, பண்டாரி ரூ. 500 - ரூ. 600 வரை, கிளி மீன் ரூ. 900 வரை, தம்பா ரூ. 250 வரை என விற்பனையாகின. வரத்து குறைந்திருந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST)

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)

சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 6:59:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

செப்.4ம் தேதி தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:48:33 PM (IST)

ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீண்டும் வழக்கில் சேர்ப்பு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:09:45 PM (IST)
