» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 8 பைக்குகள் மீட்பு
சனி 21, ஜூன் 2025 12:41:09 PM (IST)
நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரபாகர்ராஜா (28), தென்காசி மாவட்டம், மாறாந்தையைச் சேர்ந்த சரவணன்(45) மற்றும் இசக்கிமுத்து(25) ஆகிய 3 பேர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள் மீட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட வாகனங்களில் மதுரை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து திருடப்பட்ட வாகனங்களும் உள்ளன. இதனை தொடர்ந்து குற்றவாளிகளை பாளையங்கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
