» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மத்திய அரசின் காயகல்ப விருது பெற்ற அரசு மருத்துவமனை பணியாளா்களுக்கு பாராட்டு!
வியாழன் 9, மே 2024 4:16:50 PM (IST)
செங்கோட்டையில் மத்திய அரசின் காயகல்ப விருது பெற்ற அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளா்களுக்கு எம்எல்ஏ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பாராட்டு தெரிவித்தார்.
செங்கோட்டை தாலுகா அரசு பொதுமருத்துவமனை சிறப்பான மருத்துவ சேவையாற்றி வருகிறது. மருத்துவமனை தலைமை மருத்துவா் டாக்டா்ராஜேஸ்கண்ணன் தலைமையில் டாக்டர்கள், செவிலியா்கள், பணியாளா்கள் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றனா். பிரசவ அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை, எலும்பு, மூட்டு மருத்துவ அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்கைளும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுத்தம், சுகாதாரம், சுற்றப்புற துாய்மை நோய் பரவாத்தன்மை வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றிற்க்கான மத்திய அரசின் உயரிய விருதான காயகல்ப விருது பெற்றுள்ளது.
காயகல்ப விருதில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக ரூபாய் 10 லட்சம் பரிசும் கிடைத்துள்ளது. விருது பெற்ற தகவல் அறிந்த கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விருது பெற காரணமான மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜேஸ்கண்ணன் மற்றும் செவிலியா்கள், பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மேலும் மருத்துவமனைக்கு அத்தியவசிய தேவைகள் குறித்து விபரங்கள் கேட்டறிந்தார். அதனை தொடா்ந்து கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் நகரச்செயலாளா் கணேசன், நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், முத்துப்பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் திலகா், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர்உசேன், நகர எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளா் சக்திவேல், மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.