» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு : புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானது!

வியாழன் 9, மே 2024 12:52:04 PM (IST)

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் காணாமல் போன அவரது செல்போனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை காவல் துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவர், காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட மே 2-ஆம் தேதி, திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் டார்ச் லைட் வாங்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து கடைக்காரரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், டார்ச் லைட் வாங்க வந்தபோது ஜெயக்குமாரின் முகத்தில் எவ்வித பதற்றமும் இல்லையென்றும், சிரித்த முகத்துடனே காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் அவரது குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்த பிறகு எரித்தால்தான் குரல்வளை முற்றிலும் எரியும் என்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.மேலும், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட அவரின் தோட்டத்தில் இருந்தும் சில பொருள்களை கைப்பற்றி எந்தவகையான எரிபொருள் எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர். 

இதற்கிடையே, ஜெயக்குமாரின் காணாமல் போன செல்போன் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவலர்கள், அதனை தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.அவரது குடும்பத்தினருக்கு எந்தெந்த டவர்களில் இருந்து போன்கள் வந்துள்ளது என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். ஜெயக்குமாரின் முழு உடற்கூறாய்வின் அறிக்கை கிடைத்தால் மேலும் பல முடிச்சுகள் அவிழும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory