» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் : நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்!!

திங்கள் 6, மே 2024 4:24:36 PM (IST)

தூத்துக்குடியில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (55). லாரி டிரைவர். இவரது மனைவி ரெஜினா மேரி (47). கூலி வேலைக்கு சென்று வருகிறார். ரெஜினா மேரியின் நடத்தையில் சந்தேகமடைந்த நாகேந்திரன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் மனைவி ரெஜினா மேரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்து கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த முத்தையா புரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் வழக்குப் பதிவு செய்து நாகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory