» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் தங்க நகைகள் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை!

வியாழன் 25, ஏப்ரல் 2024 8:38:32 AM (IST)

திருச்செந்தூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டினம், சிவந்தி நகரைச் சோ்ந்த அருணாசல பிரகாஷ் மகன் சதீஷ் (41). தனியாா் நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறாா். மேலும் வீட்டின் மாடியில் பினாயில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறாா். சதீஷ் கடந்த 22ஆம் தேதி பிற்பகலில் தனது குடும்பத்துடன் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளாா். அப்போது நள்ளிரவு ஆன காரணத்தினால் உளுந்தூா்பேட்டையில் தனியாா் விடுதியில் தங்கி உள்ளாா்.

நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் வேலைக்கு வரக்கூடிய 2 பெண்கள் வீட்டின் முன் கதவு உடைந்து இருப்பதாக சதீஷுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சதீஷ் தனது கைப்பேசி மூலம் வீட்டின் சிசிடிவி கேமராவை சோதனை செய்துள்ளாா். அப்போது கடந்த 22ஆம் தேதி இரவு மா்மநபா் ஒருவா் முகமூடி அணிந்து, கையில் உறை அணிந்து இரும்பு கம்பியால் வீட்டின் முன் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஊருக்கு திரும்பிய சதீஷ், வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்த 21பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 54 ஆயிரம் திருடப்பட்டது தெரிய வந்தது. புகாரின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory