» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் கெடுபிடிகளை நிறுத்த வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 11:47:34 AM (IST)

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் கெடுபிடிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப் பதிவிற்கு பின்னர் கட்டுப்பாடுகளை தொடரக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

இது தாெடர்பாக அவர் கூறும்போது, தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வழிப்பறிபோல் நகை, பணத்தை பறித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள், வணிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர. எனவே, தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தொடரக் கூடாது என்று தமிழக தேர்தல் ஆணையரிடம் முறையிட உள்ளதாக தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory