» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 8:27:51 AM (IST)

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (43). இவர் நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

அதன்பேரில், மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன், தலைமை காவலர் ராஜகோபாலை கடந்த 5-ந் தேதி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் போலீஸ் ஏட்டு ராஜகோபால், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அனைத்து மகளிர் போலீசார் ஏட்டு ராஜகோபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் விசாரணை நடத்தி ஏட்டு ராஜகோபாலை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory