» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் தீவிர பிரசாரம்!!

புதன் 27, மார்ச் 2024 12:03:55 PM (IST)

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (வியாழக்கிழமை) முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அவருடைய முதற்கட்ட தேர்தல் பிரசார பயண விவரம் வருமாறு: நாளை மார்ச் 28 (வியாழக்கிழமை)- கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, 29-ந்தேதி - நெல்லை, தென்காசி, விருதுநகர், 30-ந்தேதி - தூத்துக்குடி, ராமநாதபுரம், 31-ந்தேதி - சிவகங்கை, மதுரை, ஏப்ரல் 1-ந்தேதி தேனி, திண்டுக்கல், 2-ந்தேதி- கரூர், திருச்சி. வாகனங்கள் மூலமாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory