» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் அனுஷா ரவி
சனி 16, மார்ச் 2024 4:35:25 PM (IST)
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் பதவியை அனுஷா ரவி ராஜினாமா செய்தார்.
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் அனுஷா ரவி பதிவிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவதுமாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி.
இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.இருப்பினும். தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கடிதத்தில் பதிவிட்டுள்ளார்