» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? கனிமொழி எம்பி கேள்வி!!

சனி 16, மார்ச் 2024 12:27:23 PM (IST)



தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார் என மனசாட்சியோடு பதில் சொல்லட்டும் என்று கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:  தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? இவ்வளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும்.

இதுவரைக்கும் தமிழ் நாட்டிற்கு என என்ன செய்துள்ளார்கள்? நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சாமானியனுக்கும் இவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? வேலைவாய்ப்புகள் இல்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கலாம் கனவு காணுங்கள் என்று கூறி உள்ளார்.கனவு காண்பது அவர்களது உரிமை. பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஆமாMar 17, 2024 - 06:32:41 PM | Posted IP 162.1*****

தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் வருவாரு , பதவி வாங்கிட்டு ஓடி விடுவாரு

KanimozhiMar 16, 2024 - 02:21:35 PM | Posted IP 172.7*****

Nee enna seithayi sol parppom

TamilanMar 16, 2024 - 12:57:30 PM | Posted IP 172.7*****

ஐந்து வருடமாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நீங்கள் தூத்துக்குடிக்கு என்ன செய்தீர்கள், என்ன புதிய திட்டம் கொண்டுவந்தீர்கள் என்று மனசாட்சியுடன் சொல்லுங்கள் மேடம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory