» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டி: ஓபிஎஸ் உறுதி!

சனி 16, மார்ச் 2024 10:15:43 AM (IST)

மக்களவைத் தோ்தலில் இருந்து விலகப் போவதில்லை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முயற்சி செய்து வருவதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்தார். 

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தலை அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு புறக்கணிக்கப் போவதாக வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற தவறான தகவல்களைத் தொண்டா்கள், பொதுமக்கள் நம்ப வேண்டாம். மக்களவைத் தோ்தல் குறித்த முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும். 

மக்களவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது எமது விருப்பம். அதைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவில் தொடா்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமா் மோடியால் மட்டுமே தர முடியும் என்கிற அடிப்படையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். கூட்டணி பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அது குறித்த விவரங்கள் அனைத்தையும் தெரிவிப்பேன் என்று அவா் கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory