» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புகையிலை பொருட்கள் பதுக்கல்: 2 பேர் கைது

புதன் 6, மார்ச் 2024 10:28:24 AM (IST)

சிவகிரி அருகே புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கோவில்பட்டியைச் சேர்ந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இனாம் கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் போலீசார் இனாம் கோயில் பட்டியில் குறிப்பிட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 11 மூட்டைகள் மற்றும் 50 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் இவற்றை பதுக்கி வைத்திருந்த கோவில்பட்டி இனாம் மணியாச்சி கிழக்குத் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் அண்ணாசாமி (47), கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் மகேந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அண்ணாசாமி மீது விருதுநகர் மாவட்டம் சேத்தூர், ஶ்ரீ வில்லிபுத்தூர் காவல் நிலைங்களில் வழக்கு உள்ளது .இது தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory