» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புகையிலை பொருட்கள் பதுக்கல்: 2 பேர் கைது
புதன் 6, மார்ச் 2024 10:28:24 AM (IST)
சிவகிரி அருகே புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கோவில்பட்டியைச் சேர்ந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இனாம் கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் போலீசார் இனாம் கோயில் பட்டியில் குறிப்பிட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 11 மூட்டைகள் மற்றும் 50 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இவற்றை பதுக்கி வைத்திருந்த கோவில்பட்டி இனாம் மணியாச்சி கிழக்குத் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் அண்ணாசாமி (47), கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் மகேந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அண்ணாசாமி மீது விருதுநகர் மாவட்டம் சேத்தூர், ஶ்ரீ வில்லிபுத்தூர் காவல் நிலைங்களில் வழக்கு உள்ளது .இது தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.