» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மருத்துவம் படிக்காமல் சிகிச்சை: போலி டாக்டர் கைது
புதன் 6, மார்ச் 2024 8:22:22 AM (IST)
திசையன்விளையில் மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (76). இவர் திசையன்விளை- உடன்குடி ரோடு மன்னர் ராஜா கோவில் எதிரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஆனால் இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவத்திற்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த நெல்லை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லதா திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் செல்வராஜ், மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.