» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமண்டல அலுவலக கண்காணிப்பாளர் கருணாகரன் பணி நிறைவு விழா!
செவ்வாய் 5, மார்ச் 2024 5:49:03 PM (IST)
திருநெல்வேலியில் சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளர் கருணாகரன் பணி நிறைவு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளர் கருணாகரன் பணி நிறைவு விழா திருநெல்வேலி திருமண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. விழாவில் திருமண்டல லே செயலர் டி.எஸ். ஜெயசிங் திருமண்டல பொருளாளர் மனோகரன், முன்னாள் பேராயர் ஜேசன் எஸ் தர்மராஜ் மகன் ரெவரென்ட் சைமன், திருநெல்வேலி திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், பெருமன்ற உறுப்பினர்கள், திருமண்டல அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.