» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:39:23 PM (IST)

கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்காதெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட, உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் மாநகராட்சி பொதுச் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தடை செய்யப்பட்ட 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதைப் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 2,600 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநகரம் முழுவதும் நடத்திய ஆய்வில் 1,510 கிலோ எடை கொண்ட, சந்தையில் ரூ. 2.00 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விதிமீறலில் ஈடுபட்ட கடைகளிடமிருந்து ரூ. 70,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளதாவது: "பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி மாநகரம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் கள ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகள் உடனடியாகப் பூட்டிச் சீல் வைக்கப்படும்." எனத் தெரிவித்து்ளளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)


