» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரயில் நிலைய வளாகத்தில் விநாயகர் கோயில் அகற்றம் : போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 9:16:53 PM (IST)

குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான விநாயகர் கோயில், நீதிமன்ற உத்தரவின்படி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அதிகாலையில் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த விநாயகர் கோயில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோயிலை அகற்றுமாறு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கோயில் அகற்றும் முயற்சியின் போது இந்து முன்னணி, இந்து மகாசபை மற்றும் பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாகப் பணி கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோயிலைத் திறந்து வைத்து யாகசாலை வளர்த்துச் சிறப்புப் பூஜைகளில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நரேஷ், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், ஏடிஎஸ்பிக்கள் சகாய ஜோஸ், திபு, குரும்பூர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் ரயில்வே அசிஸ்டன்ட் கமிஷனர் சிவதாஸ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு போலீசார் கூறிய நிலையில், அவர்கள் செல்ல மறுத்ததால் தெற்கு மாவட்ட இந்து முன்னணிச் செயலாளர் அருணாச்சலம், ஆழ்வை ஒன்றிய பாஜக செயலாளர் மனோகரன், மாநில இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ் உட்படப் பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கிருந்த விநாயகர் சிலையை அகற்றிய காவல்துறையினர் அதை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். அதன்பின் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கோயில் கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. விடிய விடிய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் குரும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
முட்டா இந்து முன்னணி அவர்களுக்குAug 21, 2026 - 10:28:01 AM | Posted IP 172.7*****
கோயில் மட்டும் அல்ல, தர்கா, மசூதி , சர்ச் , கல்லறை ஆனாலும் இடிக்கப்படும்.
TamilanAug 21, 2026 - 07:34:30 AM | Posted IP 172.7*****
Even if Railway station land what is issues if its distributed railway track? Why recently temple demolitions. This is unfair, railway department is central government, they have lot of land occupancy every where. For small Ganesh temple, it's not good.
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)



rambooAug 21, 2026 - 08:39:30 PM | Posted IP 162.1*****