» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)
நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் நகை, வெள்ளி மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த வாலிபரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலுசாமி என்பவர் நாகர்கோவிலில் ரயில்வே கார்டாகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மேனகாவுடன் (43) கோட்டாறு ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கடந்த 29-ஆம் தேதி பாலுசாமி வேலைக்குச் சென்ற நிலையிலும், மேனகா மருந்து வாங்க விஸ்வாசபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற நிலையிலும், வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். வீட்டிலிருந்த 13.5 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ₹2,500 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.
இது குறித்துக் கோட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மூலம் கைரேகைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய வாலிபர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும், நாகர்கோவில் ரயில் நிலைய அருகே தங்கி ஒரு கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. திருட்டு சம்பவத்திற்குப் பிறகு அவர் தலைமறைவாகியிருந்தார்.
இதையடுத்துத் தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த வாலிபரைச் சுற்றி வளைத்துப் பிடித்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட நகைகளை அவர் விற்பனை செய்துவிட்டது தெரியவந்துள்ள நிலையில், நகைகளை மீட்கத் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)


