» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)
நாகர்கோவில் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து, 30 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைச் சேர்ந்த 2 பேரைச் சுசீந்திரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி பெருங்குளம் சுடலை ஆண்டவர் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் அன்பையா (42). இவர் என்.ஜி.ஓ. காலனி காமராஜர் சாலையில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மே 13-ஆம் தேதி இரவு 9 மணிக்கு அன்பையா வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று, நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. கடையில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 1 கிலோ ஐம்பொன் ஆகியவற்றைத் துணிகரமாகக் கொள்ளையடித்துக் கொண்டு அக்கும்பல் தப்பியோடியது.
மறுநாள் காலையில் கடை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அன்பையா உடனடியாகச் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களைப் பிடிக்க உடனடியாக 2 தனிப்படைகளை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
தனிப்படை போலீசார் நகைக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை முழுமையாகக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவம் மற்றும் அடையாளங்கள் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இந்தக் காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் துப்புலக்கிய தனிப்படையினர், கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட வடிவீஸ்வரம் மாயகிருஷ்ணன் (வயது 38), ஒழுகினசேரி அருகில் பறக்கிங்கால் அய்யப்பன் (36) ஆகிய இருவரைக் கைது செய்தனர்:
கைது செய்யப்பட்ட இருவரிடமும் சுசீந்திரம் தனிப்படை போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும், அவர்கள் கொள்ளையடித்த நகைகளுடன் தலைமறைவாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் 3 பேரின் இருப்பிடங்களையும் போலீசார் நெருங்கிவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் எஞ்சிய கொள்ளையர்களும் முழுமையாகக் கைது செய்யப்பட்டு, கொள்ளைபோன நகைகள் மீட்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)


