» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!

செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவி வரும் இழுபறி மற்றும் தாமதத்தால் மனமுடைந்து, கடந்த 9-ஆம் தேதி தீக்குளித்த அக்கட்சியின் நிர்வாகி இசக்கியப்பன் (45), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வி. இசக்கியப்பன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிரத் தொண்டராகவும், நிர்வாகியாகவும் இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கைத் தொடர்ந்து, விஜய் அவர்கள் முதலமைச்சராக வேண்டும் எனப் பல்வேறு நேர்த்திக்கடன்களையும் இவர் செய்திருந்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் ஆளுநர் அழைப்பு விடுப்பதில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் இசக்கியப்பன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதன் வெளிப்பாடாக, கடந்த மே 9-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பழவூர் காவல் எல்லைக்குட்பட்ட மகாராஜபுரம் சந்திப்பில், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார்.

சுமார் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், உடனடியாக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory