» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)
திருச்சூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியைச் சேர்ந்த உன்னி மாயா (30), அனக்கல் பகுதியைச் சேர்ந்த சிவபிரசாத் (35) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவபிரசாத் உள்ளூர் சந்தையிலும், உன்னி மாயா திருச்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.
உன்னி மாயாவின் நடத்தையில் சிவபிரசாத் அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தம்பதியினரிடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நேற்று காலை உன்னி மாயா வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிவபிரசாத் உன்னி மாயாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், இச்சம்பவம் குறித்துத் தனது தாயாரிடம் சிவபிரசாத் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் அளித்தார்.
உடனடியாக வீட்டிற்கு விரைந்த பொதுமக்கள், மயங்கிய நிலையில் இருந்த உன்னி மாயாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சிவபிரசாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)


