» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பாஜக மூத்த தலைவரும், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கினைப் பதிவு செய்த எம்.ஆர். காந்தி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் ஆணையம் இந்த முறை எந்த ஒரு ஏற்பாட்டையும் ஒழுங்கான முறையில் செய்யவில்லை. பல இடங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறையாகக் கிடைக்கவில்லை. தேர்தல் நிர்வாகத்தில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களிலுள்ள கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும், வாக்காளர்களுக்கு விரைவாக வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் ஆணையம் மெத்தனமாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். தேர்தலின் போது ஒரு சட்டமன்ற உறுப்பினரே இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தப்பட்டவை:
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


