» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)
அதிமுக தலைவர்கள் பாஜகவிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டனர். ஆனால், தமிழர்களை எப்போதும் நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது என்பதை பாஜக அறியும் என்று ராகுல் காந்தி கூறினார்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: "மத்தியில் ஆளும் பாஜக அரசு, வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் மாநில அரசுகளை டெல்லியில் இருந்து ஆதிக்கம் செய்ய நினைக்கிறது. தமிழர்களை எப்போதும் நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது என்பதை பாஜக அறியும். அதனால்தான், அதிமுகவை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமிழகத்தில் கால்பதிக்க அவர்கள் முயல்கிறார்கள்.
அதிமுக தலைவர்கள் பாஜகவிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் திராவிடச் சித்தாந்தத்தை வெறுக்கிறது. ஆனால், தமிழர்கள் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ்-யிடம் சரணடைய மாட்டார்கள்.
"தமிழர்களின் அரசியல் வரலாறு என்பது எப்போதும் சமூக நீதியை முன்னிறுத்தியது. மதிய உணவுத் திட்டம், மகளிர் நலத்திட்டங்கள் என அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் தமிழ்நாடு இன்று இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக பெரும் சதி செய்து வருகிறது.
வெறுப்பை விதைத்து மக்களைப் பிளவுபடுத்தி அதில் குளிர்காய்வதே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் முக்கிய வேலை. தமிழகத்தின் கல்விப் பணிகளுக்கு வித்திட்ட காமராஜரைத் தான் எப்போதும் நினைவு கூர்வதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, கூட்டணி ஆட்சி தொடரும்போது மக்கள் நலத்திட்டங்களும் தொடரும் என உறுதியளித்தார்.
அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை 2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்தியா என்பது மனிதநேயம் மற்றும் ஒற்றுமை உணர்வால் நிறைந்த நாடு. அந்த ஒற்றுமையைக் குலைக்க நினைக்கும் பாஜகவின் திட்டத்தை மக்கள் முறியடிக்க வேண்டும் என ராகுல் காந்தி தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


