» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நான் ஓட்டு போடுவேன் விழிப்புணர்வு குறும்படம் : ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்
சனி 18, ஏப்ரல் 2026 5:39:53 PM (IST)

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, "நான் ஓட்டு போடுவேன்" என்னும் விழிப்புணர்வு குறும்படத்தைத் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாக்காளரின் வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தி, சாத்தான்குளம் இளம் முன்னோடிகள் சங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். வேளாண்மைத் துறையில் பணியாற்றி வரும் சரத்குமார் இயக்கியுள்ள இக்குறும்படத்தை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்.
இந்த விழிப்புணர்வு குறும்படம் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலர் புவனேஷ் ராம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
BabuApr 19, 2026 - 07:44:28 AM | Posted IP 172.7*****
arasu selavil yedutha padama thaniyar selava
LinkApr 18, 2026 - 08:44:16 PM | Posted IP 172.7*****
Enge
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)


சும்மா போங்கடாApr 19, 2026 - 10:53:33 AM | Posted IP 162.1*****