» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மழை, கொரோனா காலங்களில் உங்களோடு நின்றவள் நான்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

சனி 18, ஏப்ரல் 2026 10:24:27 AM (IST)



கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பு போன்ற இக்கட்டான காலங்களில் மக்களுக்காக நான் களத்தில் நின்று பணியாற்றியுள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வரும் கட்சி திமுக கிடையாது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சிக்கு உட்பட்ட 5, 35, 36, 44, 51 ஆகிய வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

திரு.வி.க. நகரில் தொடங்கி இந்திரா நகர், பிரையண்ட் நகர், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உரையாற்றிய அமைச்சர் பேசியதாவது: "கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்பதற்குக் கூட மனமில்லாத மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்குத் தேவையான கல்வி நிதி உள்ளிட்ட எவ்வித நிதியுதவியையும் முறையாக வழங்குவதில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படுகிறது.

பாஜகவின் முகமூடியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு எதையும் செய்யாத இந்தத் துரோகக் கூட்டணியை நாம் வீழ்த்துவது காலத்தின் கட்டாயம். திராவிட மாடல் ஆட்சியில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அடிப்படையில் அனைவரும் பயனடைந்துள்ளனர்.

கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பு போன்ற இக்கட்டான காலங்களில் மக்களுக்காக நான் களத்தில் நின்று பணியாற்றியுள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வரும் கட்சி திமுக கிடையாது. எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து முதலமைச்சர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

பிரையண்ட் நகரில் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் நிர்வாகிகள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு வீரவாள் வழங்கி, மீண்டும் வெற்றி பெற்று மக்கள் பணியாற்ற வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 5-வது வார்டு பிரச்சாரத்தின்போது, அமைச்சர் அனைவருக்கும் பதநீர் வழங்கியதுடன், தானும் அருந்தி தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இக்கூட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஊர் மக்கள்Apr 18, 2026 - 12:09:35 PM | Posted IP 104.2*****

ஏம்பா நடுராத்திரியில் யாராச்சும் பிரச்சாரம் பண்ணுவாங்களா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory