» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி திடீர் மாயம்!!
ஞாயிறு 5, மே 2024 11:41:23 AM (IST)
தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் துர்கா தேவி (17). பிளஸ் 2 படித்துள்ளார். இவர் கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தாயார் லட்சுமி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
mobileமே 5, 2024 - 06:30:29 PM | Posted IP 162.1*****