» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி துறைமுக சாலை விரிவாக்கப்பணி : மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

வெள்ளி 3, மே 2024 8:34:17 AM (IST)

தூத்துக்குடி துறைமுக பகுதி சாலை விரிவாக்கப் பணிகள் காரமாக மே 3, 4ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி தெற்கு உபகோட்டம் முத்தையாபுரம் மற்றும் சிப்காட் மின்சார வினியோக பிரிவுக்கு உட்பட்ட துறைமுக பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடக்கிறது. 

இதனால் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை காதர்மீரான் நகர், முத்துநகர், ஊரணி ஒத்தவீடு, வாழைக்காய் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து

TN69மே 3, 2024 - 02:11:05 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மாநகர தமிழ்சாலை, பாளையங்கோட்டை சாலை முதலியவை கடைகள், மார்கெட் மற்றும் அனைத்து வித கட்டிடங்கள் ஆகியன சாலைகளை ஆக்ரமித்தள்ளன!? எப்போது தான் விரிவாக்கம் செய்வார்களோ! தூத்துக்குடி கார்ப்பரேசன் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆர்வம் காட்டாதது தரமற்ற கட்சி தலைமையும் நிர்வாகமும் தான் என்பதை காட்டுகிறது. மேலும் தூத்துக்குடி பெருநகர வளர்ச்சி கழகம் மூலம் அபிவிருத்தி செய்யங்களேன்!!!!!??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory