» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வியாபாரிகள் இடையே மோதல் எதிரொலி: அனுமதி இன்றி இயங்கிய கடைகள் அகற்றம்!

திங்கள் 29, ஏப்ரல் 2024 12:49:49 PM (IST)

குமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில்  வியாபாரிகளுக்கு இடையே மோதல் எதிரொலியாக அனுமதி இன்றி இயங்கிய கடைகள் அகற்றப்பட்டது. 

சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரை பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி ஏராளமான கடைகள் இயங்கி வந்தன. இன்னிலையில் அங்கு  வியாபாரம் செய்து வந்த ஐஸ்கிரீம் வியாபாரிகள் இரு தரப்பிற்கு இடையே தொழில் போட்டி காரணமாக நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் வியாபாரி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் ஒருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகளை போலீசார் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள்  அகற்றினர். 

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் இது போன்ற அனுமதி இன்றி செயல்படும் கடைகளை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அனுமதிக்க கூடாது என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory