» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ 6. 25 கோடிக்கு மது விற்பனை.

திங்கள் 22, ஏப்ரல் 2024 4:11:56 PM (IST)

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ 6. 25 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 100 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இந்த கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடை மூலமாக தினமும் 2 கோடி முதல் 3-கோடி ரூபாய் மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் அதிகபட்சமாக 5-கோடி ரூபாய் வரை விற்பனையாகும் என்று தெரிய வருகிறது.

இதற்கிடையே தேர்தல் காரணமாக கடந்த 17, 18, 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக 15 ஆம் தேதியே மது பிரியர்கள் வாங்கியதில் அன்றைய தினம் ரூபாய் 6. 25 கோடியில் மது விற்ப்பனை நடந்தது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மகாவீர் ஜெயந்தி  நடைபெற்றது. இதன் காரணமாக  மதுக்கடைகள் மூடப்பட்டது.

இந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள மது கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்கள் மீண்டும் ஒரே நாளில் ரூ 6. 25 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory