» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
டாஸ்மாக் கடை அருகே மது விற்றவர் கைது : 88 மதுபாட்டில்கள் பறிமுதல்
வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:29:03 PM (IST)
கோவில்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 88 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலரும், துணை வேளாண்மை அலுவலருமான நாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் கயத்தாறு-கடம்பூர் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே ஒருவர் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
அவரை பறக்கும்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் கயத்தாறு காந்தாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் குருநாதன் என்பதும், அனுமதி இன்றி டாஸ்மாக் கடை அருகிலே மதுவிற்று வந்ததும் தெரிய வந்தது. அவர் அப்பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 88 மதுபாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் குருநாதனையும், மதுபாட்டில்களையும் பறக்கும் படையினர் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதனை கைது செய்தனர்.