» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதலைமொழி கிராமத்தில் மகளிர் தின விழா!

சனி 9, மார்ச் 2024 12:34:17 PM (IST)



நாசரேத் அருகே முதலைமொழி கிராமத்தில் ஸ்ரீனிவாச அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நாசரேத் அருகில் உள்ள தேமான்குளம்ஊராட்சிக்குட்பட்ட முதலைமொழி கிராமத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தேமான்குளம் ஊராட்சிக்குட்பட்ட மகளிர் குழுக்கள் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீனிவாச அறக்கட்டளை நிர்வாகி நந்திகோபால் விழாவினை தொடங்கி வைத்தார்.

விழாவில் மக்களுக்கு  தொழில் தொடங்கவும், வாழ்க்கைத்தரத்தை  மேப்படுத்திடவும்சிறப்பான அறிவுரை வழங் கப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண் டாடினர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வழக் கறிஞர் நீலமேகம், அக்னி மாரி, ஸ்வேதா,அருள்ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory