» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில் முன் பாய்ந்து மகனுடன் இளம்பெண் தற்கொலை: கொல்லம் அருகே சோகம்!

வெள்ளி 1, மார்ச் 2024 10:56:32 AM (IST)

வா்க்கலா அருகே கன்னியாகுமரி ரயில் முன் பாய்ந்து குழந்தையுடன் இளம்பெண் உயிரை மாய்த்தார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள மேல்வெட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி சரண்யா (25). இவா்களுக்கு 5 வயதில் மிதுன் என்ற ஒரு மகன் இருந்தான். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் சரண்யா தனது மகன் மிதுனை தூக்கி கொண்டு வா்க்கலா அருகே அயந்தி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார். 

அப்போது அந்த வழியாக வந்த கொல்லம்- கன்னியாகுமரி ரயில் மோதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வர்க்கலா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சரண்யா, மிதுன் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வர்க்கலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சரண்யாவின் கணவர் மகேஷ் மது போதைக்கு அடிமையானவர் என்பதும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறால் சரண்யா மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory