» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம்: பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை!
சனி 17, பிப்ரவரி 2024 9:58:13 AM (IST)
சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "காவல் துறை உதவி ஆய்வாளர் ஜஸ்டின் மரணத்திற்கு இழப்பீடாக வெறும் ரூ.25 லட்சத்தை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். உயிரிழந்த ஜஸ்டின் குடும்பத்திற்கு காவல் துறை உதவி ஆய்வாளர் என்ற நிலையில் ரூபாய் 50 லட்சமும், தமிழ்நாடு அரசின் தவறான அனுமதியால் ஓட்டபட்ட டாரஸ் லாரிவிபத்து மரணத்திற்கான இழப்பீடாக ரூ50 லட்சமும் ஆக மொத்தம் ரூபாய் 1 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று