» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அடிக்கல் நாட்டு விழா: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
சனி 17, பிப்ரவரி 2024 8:27:18 AM (IST)
திருச்செந்தூரில் அம்பேத்கரின் முழுஉருவ வெண்கல சிலை அமைப்பதற்கான அடிக்கல்லை கனிமொழி எம்.பி. நாட்டினார்.
திருச்செந்தூரில் நெல்லை ரோட்டில் உள்ள திருமா திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் திருச்செந்தூர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் அம்பேத்கரின் 25 அடி உயர முழு உருவ வெண்கல சிலை அடிக்கல் நாட்டுதல் மற்றும் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி இல்லம் அடிக்கல் நாட்டுதல் ஆகிய இருபெரும் விழா நடந்தது.
விழாவிற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி-தென்காசி மண்டல செயலாளரும், திருச்செந்தூர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை தலைவருமான முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அம்பேத்கரின் 25 அடி உயர முழு உருவ வெண்கல சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி இல்லத்திற்கு அடிக்கல் நாட்டினார். புத்த மத பண்பாட்டு முறைப்படி அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. பின்னர், கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கலைவேந்தன் கொடியேற்றினார். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.