» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அடிக்கல் நாட்டு விழா: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

சனி 17, பிப்ரவரி 2024 8:27:18 AM (IST)



திருச்செந்தூரில் அம்பேத்கரின் முழுஉருவ வெண்கல சிலை அமைப்பதற்கான அடிக்கல்லை கனிமொழி எம்.பி. நாட்டினார். 

திருச்செந்தூரில் நெல்லை ரோட்டில் உள்ள திருமா திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் திருச்செந்தூர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் அம்பேத்கரின் 25 அடி உயர முழு உருவ வெண்கல சிலை அடிக்கல் நாட்டுதல் மற்றும் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி இல்லம் அடிக்கல் நாட்டுதல் ஆகிய இருபெரும் விழா நடந்தது. 

விழாவிற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி-தென்காசி மண்டல செயலாளரும், திருச்செந்தூர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை தலைவருமான முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார்.  விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அம்பேத்கரின் 25 அடி உயர முழு உருவ வெண்கல சிலைக்கு அடிக்கல் நாட்டினார். 

தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி இல்லத்திற்கு அடிக்கல் நாட்டினார். புத்த மத பண்பாட்டு முறைப்படி அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. பின்னர், கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கலைவேந்தன் கொடியேற்றினார்.  இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory