» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

வெள்ளி 9, பிப்ரவரி 2024 10:48:24 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "நாகர்கோவிலில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும் முன்புதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-06428) மார்ச் 1-ந் தேதி முதல் கொச்சுவேலி வரை இயக்கப்படும்.

அதே போல, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் முன்புதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06433) மார்ச் 2-ந் தேதி முதல் கொச்சிவேலியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory