» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உபதேசியார்கள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் : ஆட்சியர் தகவல்
புதன் 31, ஜனவரி 2024 5:39:48 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உபதேசியார்கள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நலவாரியத்தின் மூலம் நல வாரிய உறுப்பினர்களுக்கு முதியோர் ஓய்வுதிய திட்டம், ஈமசடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் நிவாரணத் தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர், கிறித்துவ மதத்தை சேர்ந்த, சமூக சேவையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவர்களாக இருக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக்குறிப்புகளுடன் இணைப்பில் கண்டுள்ள படிவத்துடன் இரட்டை பிரதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்களின் நலவாரியம் மூலம் தகுதியான விண்ணப்பங்கள் அரசின் பரிந்துரைக்க அனுப்பப்படும்.
மேலும், கூடுதல் விவரம் தேவையெனில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.