» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி, கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

சனி 27, ஜனவரி 2024 12:07:10 PM (IST)

கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கடந்த 25ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி முதல் நாளை வரை என 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

இந்நிலையில் தொடர் விடுமுறை நாளையுடன் முடிவதை அடுத்து நாளை கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கும், கோவை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கும் சென்னைக்கு புறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory