» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு
வியாழன் 28, டிசம்பர் 2023 5:49:35 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் வெள்ளி கிழமை (29.12.2023) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, தொடர்ந்து நடைபெறவுள்ள மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் என்று குமரி மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.