» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை: நாகர்கோவில் வரை நீட்டிப்பு
செவ்வாய் 26, டிசம்பர் 2023 11:42:18 AM (IST)
சென்னை எழும்பூர்- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த ரயில் சேவையானது நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.